உடுமலையில் நாட்டு கோழிக்குஞ்சு பொரிப்பகத்தை திறக்க வேண்டும் - மலைவாழ் மக்கள் கோரிக்கை!

உடுமலை அருகே கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் மூடப்பட்டு கிடக்கும் நாட்டு கோழிக்குஞ்சு பொரிப்பகத்தை மீண்டும் திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மூடப்பட்டு கிடக்கும் நாட்டுக் கோழிக்குஞ்சு பொறிப்பகத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உடுமலை அடுத்த குறிச்சிகோட்டை பகுதியில் கால்நடை துறை சார்பில் மேற்கு தொடர்ச்சி மலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கடந்த 2012-13ஆம் தேதி ஆண்டில் ரூ.30 லட்சம் செலவில் நாட்டு கோழி குஞ்சு பொரிப்பகம் அமைக்கப்பட்டது.

இங்கு, 2,000 முட்டைகளை அடைகாக்கும் இயந்திரம் நிறுவப்பட்டது. இதன் மூலம், ஆண்டுக்கு ஏழு தடவை 2,000 கோழி குஞ்சுகள் உற்பத்தி செய்ய முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

குஞ்சுகளை ஒரு மாதம் வரை பராமரித்து இலவசமாகவும், ரூ.40 மற்றும் ரூ.20 என்ற திட்ட நிதி அடிப்படையில் மலைவாழ் மக்கள், சிறு குறு விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது.



இந்த குஞ்சு பொரிப்பகம் தொடர்ந்து செயல்படுவதற்கு தொடர் செலவின நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதற்கான பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நாட்டு கோழிக்குஞ்சு பொரிப்பகம் பயன்பாடின்றி மூடி கிடக்கிறது.

கட்டிடமும் பாழடைந்து புதர் மண்டி கிடக்கிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து, நாட்டு கோழிக்குஞ்சு பொரிப்பகத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...