கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - இருவர் கைது!

கோவையிலிருந்து கேரளாவிற்கு ஆம்னி வேனில் கடத்தப்பட்ட 1.5டன் ரேஷன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 17வயது சிறுவன் உட்பட இருவரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசியை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவையிலிருந்து வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதைத் தடுக்க கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி உத்தரவின் பேரில், டிஎஸ்பி கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் மேனகா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் சேரன் மாநகர் விளாங்குறிச்சி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதனுள் சுமார் 30 மூட்டைகளில் சுமார் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதில் சுமார் 21 மூட்டைகள் தமிழ்நாடு அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் சாக்குப் பைகளில் இருந்தது.

இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், காளப்பட்டி கரையான் பாளையத்தை சேர்ந்த பாபு என்பவர், 17 வயது சிறுவனை உடன் வைத்துக் கொண்டு, ரேஷன் கடைகளில் அரிசியை குறைந்து விலைக்கு வாங்கி கேரள மாநிலத்திற்கு கடத்தியது தெரியவந்தது.

கைப்பற்றப்பட்ட அரிசி சேரன் மாநகர் சிவசக்தி நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையிலிருந்து அதன் விற்பனையாளர் கோபாலன் என்பவர் மூலமாக குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை பெற்று, அதனை சட்டவிரோதமாக கேரளாவிற்கு கடத்திச் சென்றதும் அம்பலமானது.

கடத்தப்பட்ட ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் ஆம்னி வேனை ஓட்டி வந்த 17 வயது சிறுவன் மற்றும் இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்த காளப்பட்டி நகர கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடை விற்பனையாளர் கோபாலன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தலைமறைவாக உள்ள கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட பாபு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...