தாராபுரத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தாலி பறிப்பு - துணிகர திருடனுக்கு போலீஸ் வலை

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மளிகை கடை உரிமையாளரின் மனைவி நந்தினி கழுத்தில் இருந்த ரூ 2.70 லட்சம் மதிப்புள்ள தங்க தாலியை மர்ம நபர் பறித்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் செல்லும் சாலையில் ராம் நகரில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருபவர் ராஜா (வயது38). இவரது மனைவி நந்தினி (வயது28). நேற்று இரவு மளிகை கடையில் வியாபாரம் முடித்துவிட்டு கடையின் அருகிலேயே புதிதாக கட்டிய ராஜாவின் வீட்டில் கணவன் மனைவி இருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.



நள்ளிரவில் வீட்டின் வெளிப்பக்க கதவின் பூட்டை உடைத்த மர்ம நபர், கதவின் கண்ணாடி கிரில் வழியாக கையை உள்ளே நுழைத்து சோபா கம்பெனியின் மீது வைக்கப்பட்டிருந்த வீட்டு கதவின் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே நுழைந்து அனைத்து அறைகளிலும் தேடியுள்ளார். அங்கு எந்த பொருளும் கிடைக்காத நிலையில், உறங்கிக் கொண்டிருந்த நந்தினியின் கழுத்தில் அணிந்திருந்த ஆறரை சவரன் தங்கத் தாலி கொடியை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.

திடுக்கிட்டு விழித்து எழுந்த நந்தினி, திருடனை பார்த்து அலறி கூச்சலிட்டார். அதற்குள் காம்பவுண்ட் சுவரை தாண்டி குதித்து மர்ம நபர் தப்பி ஓடி தலைமறைவானார். நட்ட நடு இரவில் வீடு புகுந்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நந்தினியின் கழுத்தில் இருந்த தங்கத் தாலி கொடியை பறித்துச் சென்ற துணிகர சம்பவம் தாராபுரம் பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

கொள்ளைபோன தாலிக்கொடியின் மதிப்பு ரூ 2 லட்சத்து 70 ஆயிரம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனராஜ் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு, தப்பியோடிய திருடனை வலைவீசித் தேடிவருகின்றனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...