உடுமலையில் 'அறிவொளி சுடர்கள்' நூல் வெளியீடு - பள்ளி மற்றும் நூலகங்களுக்கு புத்தகம் வழங்கல்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற 'அறிவொளி சுடர்கள்' நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ச.வி.சங்கர் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். இதனையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 'அறிவொளி சுடர்கள்' நூல் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற அறிவொளி சுடர்கள் நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ச.வி.சங்கர் கலந்து கொண்டார்.

அறிவொளி இயக்கம் என்ற அமைப்புகள் கடந்த 1992ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு முழுவதும் கல்வி சேவையாற்றியது. இந்த அமைப்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சேவைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், அறிவொளி இயக்கம் 30 ஆண்டுகள் நிறைவையொட்டி, கோவையில் சமீபத்தில் அறிவொளி இயக்க குடும்ப விழா நடைபெற்றது. இந்த விழாவில் கடந்த 30 ஆண்டுகளாக அறிவொளி இயக்கத்தின் களப்பணிகளை தொகுத்து அறிவொளி சுடர்கள் என்ற நூல் வெளியிடப்பட்டது.



இதனிடையே, உடுமலையில் அறிவொளி சுடர்கள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், முன்னாள் கோவை மாவட்ட ஆட்சியரும் அறிவொளி திட்ட தலைவருமான ச.வி.சங்கர் கலந்து கொண்டு நூல் வெளியீட்டு விழாவை சிறப்பித்தார்.



இந்த நூல் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் உடுமலை பகுதி நூலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அறிவொளி சுடர்கள் நூல் வழங்கப்பட்டது.



இதை உடுமலை முன்னாள் அறிவொளித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவராஜ், குடிமங்கலம் ஒன்றிய திட்ட ஒருங்கிணைப்பாளர் மணி, பணி நிறைவு நூலகர் கணேசன் ஆகியோர் மலையாண்டிபட்டினம் நூலகம், மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி, உடுமலை கிளை நூலகம் 2 மற்றும் 3 நூலகங்களுக்கும் அறிவொளி சுடர்கள் நூல்களை வழங்கினர்.

இதேபோல் மற்ற நூலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கும் அறிவொளி சுடர்கள் நூல்கள் வழங்கப்பட உள்ளதாக சிவராஜ் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...