உடுமலையில் 'அறிவொளி சுடர்கள்' நூல் வெளியீடு - பள்ளி மற்றும் நூலகங்களுக்கு புத்தகம் வழங்கல்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற 'அறிவொளி சுடர்கள்' நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ச.வி.சங்கர் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். இதனையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 'அறிவொளி சுடர்கள்' நூல் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற அறிவொளி சுடர்கள் நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ச.வி.சங்கர் கலந்து கொண்டார்.

அறிவொளி இயக்கம் என்ற அமைப்புகள் கடந்த 1992ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு முழுவதும் கல்வி சேவையாற்றியது. இந்த அமைப்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சேவைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், அறிவொளி இயக்கம் 30 ஆண்டுகள் நிறைவையொட்டி, கோவையில் சமீபத்தில் அறிவொளி இயக்க குடும்ப விழா நடைபெற்றது. இந்த விழாவில் கடந்த 30 ஆண்டுகளாக அறிவொளி இயக்கத்தின் களப்பணிகளை தொகுத்து அறிவொளி சுடர்கள் என்ற நூல் வெளியிடப்பட்டது.



இதனிடையே, உடுமலையில் அறிவொளி சுடர்கள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், முன்னாள் கோவை மாவட்ட ஆட்சியரும் அறிவொளி திட்ட தலைவருமான ச.வி.சங்கர் கலந்து கொண்டு நூல் வெளியீட்டு விழாவை சிறப்பித்தார்.



இந்த நூல் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் உடுமலை பகுதி நூலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அறிவொளி சுடர்கள் நூல் வழங்கப்பட்டது.



இதை உடுமலை முன்னாள் அறிவொளித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவராஜ், குடிமங்கலம் ஒன்றிய திட்ட ஒருங்கிணைப்பாளர் மணி, பணி நிறைவு நூலகர் கணேசன் ஆகியோர் மலையாண்டிபட்டினம் நூலகம், மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி, உடுமலை கிளை நூலகம் 2 மற்றும் 3 நூலகங்களுக்கும் அறிவொளி சுடர்கள் நூல்களை வழங்கினர்.

இதேபோல் மற்ற நூலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கும் அறிவொளி சுடர்கள் நூல்கள் வழங்கப்பட உள்ளதாக சிவராஜ் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...