திருமூர்த்தி அணையில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணைப் பகுதியில் போதிய பராமரிப்பு இல்லாததால், புதர் சூழ்ந்து மற்றும் சேதம் அடைந்து காணப்படும் சிறுவர் பூங்காவைச் சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருமூர்த்தி அணைப் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவைச் சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமண லிங்கேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் வழியில் வண்ண மீன் காட்சியகம், சிறுவர் பூங்கா, படகு இல்லம், நீச்சல் குளம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.



இதில் நீச்சல் குளம் மட்டும் தற்போது வரையிலும் செயல்பாட்டிலிருந்து வருகிறது. சிறுவர் பூங்கா போதிய பராமரிப்பு இல்லாததால் புதர் சூழ்ந்தும், அதில் உள்ள உபகரணங்கள் மற்றும் விலங்குகளின் சிலைகள் சேதம் அடைந்தும் உள்ளன.



அதை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர பலமுறை கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டதற்கான நோக்கமும் மக்களின் வரிப் பணமும் வீணாகி வருகிறது.



எனவே திருமூர்த்தி அணை அருகே பூட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமூர்த்தி அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Newsletter

கோவை விமான நிலையம் 5.15 சதவீதம் வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,74...

கோவை விமான நிலையம் 5.15% வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15% வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,745 பேர்...

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...