வால்பாறை அக்காமலை புல்மலை வனப்பகுதியில் காட்டுத்தீ - ஒருவர் கைது

கோவை மாவட்டம் வால்பாறை அருகிலுள்ள அக்காமலை புல்மலைப்பகுதியில், சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு காரணமான கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவரை கைது செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வால்பாறை வனப்பகுதியில் உள்ள அக்காமலை புல் மலைகளில் சில நாட்களுக்கு முன்பு திடீரென காட்டு தீ பரவியது. வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான சிறப்புக் குழு, வனவர் அய்யாசாமி மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்களுடன் இணைந்து தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்ததில், மனிதனால் உருவாக்கப்பட்ட காட்டுத் தீ, இதற்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இதையடுத்து, வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் ராமசுப்ரமணியன் மற்றும் துணை இயக்குநர் பார்கவ தேஜா அறிவுறுத்தலின்படி அனைத்து சோதனைச் சாவடிகள் மற்றும் பிற வனப் பகுதிகளில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் உள்ளதாக எனக் கண்காணிக்கப்பட்டது.



இந்நிலையில், கேரளா மறையூரில் இருந்து அக்காமலை புல் மலை வழியாக பொள்ளாச்சிக்கு சந்தன மரக் கட்டைகளை கடத்திய குற்றத்திற்காக பொள்ளாச்சியில் கடந்த மாதம் 27ம் தேதி அன்று கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி (வயது 42) என்ற நபர் பிடிபட்டார்.



வால்பாறை வன சரகர் வெங்கடேஷ், பிடிபட்ட கே.ராஜீவ் காந்தி என்பவரிடம் விசாரணை செய்ததில், கடந்த 25ஆம் தேதி அக்காமலை புல் மலையில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு காரணம் தான்தான் என்றும், கேரளா-மறையூரில் இருந்து பொள்ளாச்சிக்கு அக்காமலை புல்மலை வழியாக சந்தன மரக்கட்டைகளை தடையின்றி கடத்துவதற்காகவும், வன ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும் வைக்கப்பட்டதாகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக, ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை சரகம் சார்பில் புல்மலை தேசிய பூங்காவில் தீ வைத்த குற்றத்திற்காக ராஜீவ்காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...