அமராவதி அணையில் இருந்து மார்ச் 31வரை தண்ணீர் திறக்க தமிழக அரசு அரசாணை!

உடுமலையில் உள்ள அமராவதி அணையில் இருந்து மார்ச்.2 முதல் வரும் 31ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, 453.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட ஆணை பிறப்பித்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசன வசதிக்காக மார்ச்.2 முதல் 31ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.



இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் உள்ள 8 பழைய ராஜ வாய்க்கால் பாசன பகுதிகளில் கதிர் நிலையில் உள்ள நெற்பயிர்களுக்கு அமராவதி அணையிலிருந்து அமராவதி ஆற்று மதகு வழியாக விவசாயிகள் கோரிக்கையை ஏற்று இன்று முதல் 31ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க காலநீட்டிப்பு செய்யப்படுகிறது.



மொத்தம் 31 நாட்களில் 21 நாட்கள் தண்ணீர் திறப்பு, 10 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில் மொத்தம் 453.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...