அமராவதி அணையில் இருந்து மார்ச் 31வரை தண்ணீர் திறக்க தமிழக அரசு அரசாணை!

உடுமலையில் உள்ள அமராவதி அணையில் இருந்து மார்ச்.2 முதல் வரும் 31ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, 453.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட ஆணை பிறப்பித்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசன வசதிக்காக மார்ச்.2 முதல் 31ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.



இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் உள்ள 8 பழைய ராஜ வாய்க்கால் பாசன பகுதிகளில் கதிர் நிலையில் உள்ள நெற்பயிர்களுக்கு அமராவதி அணையிலிருந்து அமராவதி ஆற்று மதகு வழியாக விவசாயிகள் கோரிக்கையை ஏற்று இன்று முதல் 31ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க காலநீட்டிப்பு செய்யப்படுகிறது.



மொத்தம் 31 நாட்களில் 21 நாட்கள் தண்ணீர் திறப்பு, 10 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில் மொத்தம் 453.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...