கோவை பேருந்தில் மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு - மர்ம நபருக்கு போலீஸ் வலை

கோவை வடவள்ளியை சேர்ந்த மூதாட்டி சாந்தகுமாரி, உக்கடத்திற்கு பேருந்தில் செல்லும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் கழுத்தில் அணிந்திருந்த 3.5 சவரன் நகையை திருடிச் சென்ற நபரை உக்கடம் போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் மூதாட்டி சாந்தகுமாரி (வயது62). இவர் டவுன்ஹால் பகுதிக்கு தனிப்பட்ட வேலையாக சென்றார்.

வேலையை முடித்துவிட்டு வடவள்ளி செல்வதற்காக டவுன்ஹாலில் இருந்து உக்கடத்திற்கு ரூட் நெம்பர் 33 பேருந்தில் அவர் ஏறி பயணித்துள்ளார்.

பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த நிலையில், மூதாட்டி உக்கடம் பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார்.

அப்பொழுது தன் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்க சங்கிலி மாயமானதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர், பேருந்து நிலையம் அருகே உள்ள உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்து கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் வடவள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...