உலக வன விலங்குகள் தினம் - வாளையார் வனப்பகுதியில் கல்லூரி மாணவர்கள் தூய்மை பணி!

உலக வன விலங்குகள் தினத்தை வாளையார் வனப்பகுதியில் ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி, டாக்டர் எஸ்.என்.எஸ். ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி மற்றும் வன உயிர் & இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT) சார்பில் மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.



கோவை: வாளையார் வனப்பகுதியில் உலக வன விலங்குகள் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், வாளையார் வனப்பகுதியில்,உலக வன விலங்குகள் தினத்தை முன்னிட்டு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி , டாக்டர் எஸ்.என்.எஸ்.ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி மற்றும் வன உயிர் & இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT) சார்பில், வாளையார் வனப்பகுதியில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.



மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின் பேரில், வனச்சரக அலுவலர் சந்தியா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் வனப்பகுதி முக்கியத்துவம் பற்றியும், குப்பைகளைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



இதில் ராக் ரவீந்திரன், வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சிராஜ்தீன், வாஹித் மோகன், பைசல், விக்னேஷ் ரத்தினம் கல்லூரி ஆசிரியர்கள் சத்குரு, ஞானசேகர், சவ்ந்தர்யா, ஆதித்யா, ராகேஷ் மற்றும் ராஜலட்சுமி கல்லூரி ஆசிரியர்கள் வெங்கடேஷ் லாவண்யா, சண்முக பிரியா கலந்து கொண்டு தன்னார்வலர்களை ஒருங்கிணைத்தனர்.

வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சிராஜ்தீன் கூறியதாவது:

கோவை மாவட்டம், வாளையார் ரயில் பாதையானது இரு அடர்ந்த வனப்பகுதி வழியே பிரிந்து செல்ல ஏ ட்ராக் மற்றும் பி ட்ராக் இரு பாதைகள் உள்ளன. இவ்வழியாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பயணிகள் சிலர் வனப் பகுதியில் வீசியெறியும் பிளாஸ்டிக் கழிவுகளால் இயற்கை சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.



இதனை இப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகள், மான்கள், யானைகள் போன்ற விலங்கினங்கள், சிப்ஸ் போன்ற தின்பண்டங்களின் உப்பு சுவைக்காக அவற்றை பிளாஸ்டிக் கவரோடு உட்கொண்டு விடுகின்றன. இதனால், செரிமானம் ஆகாமல் வயிற்றில் தங்கி கடும் வலி ஏற்படுவதால் விலங்குகள் துடிதுடித்து உயிரிழக்கின்றன.

தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் சென்று மது அருந்துவதோடு, காலியான கண்ணாடி மது பாட்டில்களை வனத்திற்குள் வீசி செல்கின்றனர். இந்த கண்ணாடி மது பாட்டில்களை அறியாமல் மிதித்துவிடும் யானைகள் படும் வேதனை சொல்லில் அடங்காது.

தரையில் வாழும் மிகப்பெரிய பேருயிரான யானைகளின் கால் பாதத்தில் கண்ணாடி துண்டுகள் புகுந்து தொடர்ந்த நடக்க இயலாமல் சாய்ந்து பல நாட்கள் வலியாலும், பசியாலும், தாகத்தாலும் அங்கேயே கிடந்தது உயிரிழந்து விடுகின்றன.

இப்படி மனிதர்களின் அலட்சியத்தாலும் அறியாமையாலும் விலங்கினங்கள் மரணிப்பது தொடர் கதையாகி வருகிறது. இனிவரும் காலங்களில் இது போன்ற செயல்களில் பயணிகள் செய்யக்கூடாது

இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...