60 வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி - பொள்ளாச்சி போலீசாரிடம் சிக்கிய பலே திருடன்!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் திருட்டு, கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த அறந்தாங்கியை சேர்ந்த லட்சுமணன் என்பவர், பொள்ளாச்சி போலீசாரிடம் சிக்கினார். போலீசாரை பார்த்து தப்பியோடிய அவரை 2 கிலோமீட்டர் துரத்திச் சென்று போலீசார் கைது செய்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் ரோந்து பணியின் போது போலீசாரை கண்டதும் தப்ப முயன்ற திருடனை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து வேகமாக சென்றுள்ளார்.



இதைப்பார்த்த போலீசார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று, அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த லட்சுமணன்(44) என்பதும், இவர் மீது 60-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் தெரியவந்தது.

திருட்டு வழக்கில் வாய்தாவுக்காக வந்த லட்சுமணன் அரசு மருத்துவமனையில் இரு சக்கர வாகனத்தையும், புளியம்பட்டி பகுதியில் உள்ள தேநீர் கடையின் பூட்டை உடைத்து 1,270 ரூபாய் பணத்தையும் திருடியது தெரிய வந்துள்ளது.

பின்னர் அவரிடமிருந்து இரு சக்கர வாகனம் மற்றும் ரூ.1,270 பணம், திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், முகமூடி, கையுறை போன்ற பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

மேலும் வழக்குப் பதிவு செய்துள்ள மகாலிங்கபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...