கோவைபுதூர் பகுதியில் காட்டுயானைகள் உலா - பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோவை புதூர் பிரஸ் என்கிலேவ் பகுதியில் புகுந்த மூன்று காட்டு யானைகளை அப்பகுதி மக்கள் வனப்பகுதிக்குள் விரட்டினர். இரவு நேரத்தில் மீண்டும் யானைகள் வர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


கோவை: கோவைபுதூர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மூன்று காட்டுயானைகளைப் பொதுமக்கள் விரட்டியடித்தனர்.

கோடைக் காலம் துவங்கியது முதல் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகளுக்குள் அவ்வப்போது காட்டு யானைகள் தண்ணீர் தேடி வரத்துவங்கி உள்ளது. ஏற்கனவே வனத்துறை சார்பில் எல்லைகளில் தொட்டிகள் அமைக்கப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒரு சில நேரங்கள் காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு கோவைப்புதூர் அருகே உள்ள பிரஸ் என்கிலேவ் பகுதிகளுக்குள் புகுந்த மூன்று காட்டு யானைகள் தண்ணீர் தேடியுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இரவு நேரத்தில் மீண்டும் வருமோ என்ற அச்சத்தில் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதை அடுத்து அப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இரவு நேரங்களில் அப்பகுதியில் பொதுமக்கள் கவனமாகச் செல்ல வேண்டுமென வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...