கோவைபுதூர் பகுதியில் காட்டுயானைகள் உலா - பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோவை புதூர் பிரஸ் என்கிலேவ் பகுதியில் புகுந்த மூன்று காட்டு யானைகளை அப்பகுதி மக்கள் வனப்பகுதிக்குள் விரட்டினர். இரவு நேரத்தில் மீண்டும் யானைகள் வர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


கோவை: கோவைபுதூர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மூன்று காட்டுயானைகளைப் பொதுமக்கள் விரட்டியடித்தனர்.

கோடைக் காலம் துவங்கியது முதல் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகளுக்குள் அவ்வப்போது காட்டு யானைகள் தண்ணீர் தேடி வரத்துவங்கி உள்ளது. ஏற்கனவே வனத்துறை சார்பில் எல்லைகளில் தொட்டிகள் அமைக்கப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒரு சில நேரங்கள் காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு கோவைப்புதூர் அருகே உள்ள பிரஸ் என்கிலேவ் பகுதிகளுக்குள் புகுந்த மூன்று காட்டு யானைகள் தண்ணீர் தேடியுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இரவு நேரத்தில் மீண்டும் வருமோ என்ற அச்சத்தில் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதை அடுத்து அப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இரவு நேரங்களில் அப்பகுதியில் பொதுமக்கள் கவனமாகச் செல்ல வேண்டுமென வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...