கோவைபுதூர் பகுதியில் காட்டுயானைகள் உலா - பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோவை புதூர் பிரஸ் என்கிலேவ் பகுதியில் புகுந்த மூன்று காட்டு யானைகளை அப்பகுதி மக்கள் வனப்பகுதிக்குள் விரட்டினர். இரவு நேரத்தில் மீண்டும் யானைகள் வர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


கோவை: கோவைபுதூர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மூன்று காட்டுயானைகளைப் பொதுமக்கள் விரட்டியடித்தனர்.

கோடைக் காலம் துவங்கியது முதல் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகளுக்குள் அவ்வப்போது காட்டு யானைகள் தண்ணீர் தேடி வரத்துவங்கி உள்ளது. ஏற்கனவே வனத்துறை சார்பில் எல்லைகளில் தொட்டிகள் அமைக்கப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒரு சில நேரங்கள் காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு கோவைப்புதூர் அருகே உள்ள பிரஸ் என்கிலேவ் பகுதிகளுக்குள் புகுந்த மூன்று காட்டு யானைகள் தண்ணீர் தேடியுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இரவு நேரத்தில் மீண்டும் வருமோ என்ற அச்சத்தில் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதை அடுத்து அப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இரவு நேரங்களில் அப்பகுதியில் பொதுமக்கள் கவனமாகச் செல்ல வேண்டுமென வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...