கோவைபுதூர் பகுதியில் காட்டுயானைகள் உலா - பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோவை புதூர் பிரஸ் என்கிலேவ் பகுதியில் புகுந்த மூன்று காட்டு யானைகளை அப்பகுதி மக்கள் வனப்பகுதிக்குள் விரட்டினர். இரவு நேரத்தில் மீண்டும் யானைகள் வர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


கோவை: கோவைபுதூர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மூன்று காட்டுயானைகளைப் பொதுமக்கள் விரட்டியடித்தனர்.

கோடைக் காலம் துவங்கியது முதல் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகளுக்குள் அவ்வப்போது காட்டு யானைகள் தண்ணீர் தேடி வரத்துவங்கி உள்ளது. ஏற்கனவே வனத்துறை சார்பில் எல்லைகளில் தொட்டிகள் அமைக்கப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒரு சில நேரங்கள் காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு கோவைப்புதூர் அருகே உள்ள பிரஸ் என்கிலேவ் பகுதிகளுக்குள் புகுந்த மூன்று காட்டு யானைகள் தண்ணீர் தேடியுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இரவு நேரத்தில் மீண்டும் வருமோ என்ற அச்சத்தில் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதை அடுத்து அப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இரவு நேரங்களில் அப்பகுதியில் பொதுமக்கள் கவனமாகச் செல்ல வேண்டுமென வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...