மடத்துக்குளம் அருகே கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி - போராடி உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

மடத்துக்குளம் அருகேயுள்ள மெட்ராத்தி பகுதியில் 80 அடி கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே 80 அடி கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை வனத்துறையினர், ஒரு மணி நேரம் போராடி உயிருடன் காப்பாற்றினர்.

மடத்துக்குளம் அடுத்த மெட்ராத்தி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. விவசாயியான இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது 6 மாதம் வயதுடைய நாட்டு காளைக்கன்று ஒன்று எதிர்பாராத விதமாக தோட்டத்திலுள்ள கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.

சுமார் 80 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் சுமார் 40 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தது. இந்நிலையில், தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த கன்றுக்குட்டியை மீட்க முடியாத நிலையில், உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.



உடனடியாக நிலைய அலுவலர் கோபால் தலைமையில் விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் கயிறுகள் உதவியுடன் கிணற்றில் இறங்கி ஒரு மணி நேரம் போராடி கன்றை பத்திரமாக மீட்டனர்.



கிணற்றில் தத்தளித்த கன்றுக்குட்டி மீட்கப்பட்டவுடன் கிணற்றின் அருகே நின்றிருந்த தாய்ப்பசுவிடம் உற்சாகமாய் தாய்ப்பால் அருந்தியது அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

மடத்துக்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி விவசாயிகள் கைகூப்பி நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...