அலங்கியம் விற்பனை கூடத்தில் ரூ 9.8 லட்சத்துக்கு மக்காச்சோளம் ஏலம்

தாராபுரம் அடுத்துள்ள அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு, திருப்பூர், திண்டுக்கல்லில் இருந்து ஏராளமான விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த 42,476 கிலோ மக்காச் சோளம் குவிண்டால் ஒன்று ரூ.2,305 என மொத்தமாக ரூ.9.08லட்சத்திற்கும் ஏலம் போனது.


திருப்பூர்: திருப்பூர் தாராபுரம் அடுத்த அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் ரூ.9.08லட்சத்திற்கு விற்பனை போனது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த திருப்பூர் விற்பனை குழுவின் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளத்திற்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இதற்காக திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் 42,476 கிலோ மக்காச்சோளத்தை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

அதில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ. 2305-க்கும் குறைந்தபட்சமாக ரூ.2288-க்கும் விலை போனது. அதன் மூலம் மொத்தமாக ரூ. 9,76,353-க்கு மக்காச்சோளம் விற்பனையானது.

ஏலத்திற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் அருள்குமார் செய்திருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...