கோவையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட 2.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கோவை கோட்டைபுதூர் அருகே கேரளாவுக்கு கடத்துவதற்காக சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 2.2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ரேஷன் அரிசி பதுக்கலில் ஈடுபட்ட நிஜாமுதீன் மற்றும் ஜபாருல்லா ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் கோட்டைபுதூர் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 2.2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழக அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசி தொடர்ந்து கேரளாவிற்கு கடத்தப்பட்டு வந்த நிலையில், அதனை கண்காணிக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு கூடுதல் இயக்குனர் அருண் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில், பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் கோவை கரும்புக்கடை, ஜி.எம்.நகர், கோட்டை புதூர் ஆகிய பகுதிகளில் திடீரென ரோந்து சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோட்டை புதூர் ஜமீன்தார் நகர் பகுதியை சேர்ந்த ஜபாருல்லா என்பவருக்கு சொந்தமான கார் செட்டில் நின்று கொண்டிருந்த காரை சோதனையிட்ட போது, அதில் தலா 45 கிலோ என 50 மூட்டைகளில் 2.2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட தொடர் விசாரணையில் போத்தனூர் திருமலை நகர் பகுதியில் சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் பல்வேறு பகுதிகளில் சேகரித்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்றுள்ளார். போலீசாரின் வாகன சோதனை மிகவும் தீவிரமாக இருந்ததால் ஜபருல்லாவிக்கு சொந்தமான கார் செட்டில் ரேசன் அரிசி மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 2.2 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் அரிசியை பதுக்கி வைத்த நிஜாமுதீன் மற்றும் இடத்தின் உரிமையாளர் ஜபாருல்லா ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...