கோவையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட 2.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கோவை கோட்டைபுதூர் அருகே கேரளாவுக்கு கடத்துவதற்காக சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 2.2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ரேஷன் அரிசி பதுக்கலில் ஈடுபட்ட நிஜாமுதீன் மற்றும் ஜபாருல்லா ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் கோட்டைபுதூர் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 2.2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழக அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசி தொடர்ந்து கேரளாவிற்கு கடத்தப்பட்டு வந்த நிலையில், அதனை கண்காணிக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு கூடுதல் இயக்குனர் அருண் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில், பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் கோவை கரும்புக்கடை, ஜி.எம்.நகர், கோட்டை புதூர் ஆகிய பகுதிகளில் திடீரென ரோந்து சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோட்டை புதூர் ஜமீன்தார் நகர் பகுதியை சேர்ந்த ஜபாருல்லா என்பவருக்கு சொந்தமான கார் செட்டில் நின்று கொண்டிருந்த காரை சோதனையிட்ட போது, அதில் தலா 45 கிலோ என 50 மூட்டைகளில் 2.2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட தொடர் விசாரணையில் போத்தனூர் திருமலை நகர் பகுதியில் சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் பல்வேறு பகுதிகளில் சேகரித்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்றுள்ளார். போலீசாரின் வாகன சோதனை மிகவும் தீவிரமாக இருந்ததால் ஜபருல்லாவிக்கு சொந்தமான கார் செட்டில் ரேசன் அரிசி மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 2.2 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் அரிசியை பதுக்கி வைத்த நிஜாமுதீன் மற்றும் இடத்தின் உரிமையாளர் ஜபாருல்லா ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...