உடுமலை நகராட்சியில் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள வீட்டு மனை மீட்பு!

உடுமலை நகராட்சியில் பொதுப் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.5கோடி மதிப்பிலான மனைப்பிரிவை நகராட்சிக்கு ஒப்படைக்காமல் உரிமையாளர் தனியாருக்கு விற்பனை செய்ய முயன்ற நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் மீட்டுள்ளதாக, நகர்மன்ற தலைவர் முமத்தீன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: உடுமலை நகராட்சியில் ரூ.5 கோடி மதிப்புள்ள வீட்டுமனை மீட்கப்பட்டு உள்ளதாக நகர்மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட பழனி சாலை அருகே உள்ள துரைசாமி மனைப்பிரிவு, நகர் ஊரமைப்பு துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு. மனைப்பிரிவு மொத்த பரப்பளவில் பொதுப் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 24.00 சென்ட் நிலமானது ரிசர்வ் சைட் என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



மேற்கண்ட மனைப்பிரிவை உரிமையாளர் நகராட்சிக்கு ஒப்படைக்காமலும், இதனை விற்பனை செய்ய முயற்சி செய்ததை தொடர்ந்து நகராட்சியால் ரிசர்வ் சைட் இடத்தினை மீட்டு பொதுமக்கள் அறியும் வண்ணம் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட இடத்தின் மொத்த பரப்பளவு 24.00 சென்ட் ஆகும். இதன் மதிப்பு சுமார் ரூபாய் 5 கோடி ஆகும். இந்த மனை பிரிவு மீட்கப்பட்டு உள்ளதாக நகர்மன்றத் தலைவர் முமத்தீன் தெரிவித்தார்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...