ரவுடி சுட்டதால் தற்காப்புக்காக போலீசார் சுட வேண்டியதாகிவிட்டது..! - கோவை துணை ஆணையர் சந்தீஸ் விளக்கம்

கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு பகுதியில் இன்று காலை கைதி- போலீசார் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தை மாநகர காவல்துறை துணை ஆணையர் சந்தீஸ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ரவுடி சஞ்சய் ராஜா மறைத்து வைத்திருந்த துப்பாக்கி, நாட்டு துப்பாக்கி போல இருப்பதாக துணை ஆணையர் சந்தீஸ் தெரிவித்தார்.



கோவை: கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு பகுதியில் இன்று காலை கைதி- போலீசார் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தை மாநகர காவல்துறை துணை ஆணையர் சந்தீஸ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



இன்று காலை சஞ்சய் ராஜாவை கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை இந்த பகுதிக்கு அழைத்து வந்தனர். சஞ்சய்ராஜாவிடம் இரண்டு துப்பாக்கிகள் இருப்பதாக விசாரணையில் சொல்லியிருந்தார். ஏற்கனவே ஒரு துப்பாக்கி சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டாவது துப்பாக்கியை பறிமுதல் செய்ய இங்கே அழைத்து வந்திந்தனர்.

சரவணம்பட்டி பகுதியில்தான் சஞ்சய் ராஜா தங்கி இருப்பார். இந்த பகுதியில் மறைத்து வைத்திருந்ததாக சொன்னதால் அந்தத் துப்பாக்கியை பறிமுதல் செய்ய அவரை அழைத்து வந்தனர். இந்த துப்பாக்கி நாட்டுத் துப்பாக்கியைப்போல இருக்கிறது.



மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தவுடன் சுடத் துவங்கி விட்டார்.



தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் சுட்டதில் சஞ்சய்ராஜா காலில் குண்டு பாய்ந்தது.



அவர் பத்து நிமிடத்தில் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லபட்டார். தற்போது நல்ல நிலையில் இருக்கிறார். போலீசாரை குறிவைத்து சுட்டார். நல்வாய்ப்பாக போலீசார் தப்பி விட்டனர்.



சஞ்சய் ராஜா மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் இருக்கிறது.

துப்பாக்கி எங்கு வாங்கினார் என்பது குறித்து விசாரித்த பொழுது பீகார், ஒரிசா என சொல்லியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். கோவையில் துப்பாக்கி கலாச்சாரம் கிடையாது. இவர் அதை செய்து வந்து இருக்கிறார்.

இந்த துப்பாக்கி நாட்டு துப்பாக்கியை போலவே இருக்கிறது. இன்னொரு துப்பாக்கி சற்று மாறுதலாக இருக்கிறது. அதை ஆய்வுக்கு அனுப்பினால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். இவை சட்ட விரோதமான துப்பாக்கிகள். துப்பாக்கியில் எவ்வளவு குண்டுகள் இருக்கிறது என்பது ஆய்வுக்கு பின்னரே தெரியவரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...