தமிழகத்தில் பல்வேறு கும்கி ஆப்ரேஷன்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வந்த கும்கி யானை கலீமுக்கு ஓய்வு - வனத்துறை அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில ஆண்டுகளாக கும்கி ஆப்ரேஷன்களில் வனத்துறைக்கு உதவியாக வெற்றிகரமாக செயல்பட்டு வந்த, கும்கி யானைகளின் அரசன் என அழைக்கப்படும் கலீம் 60 வயதை கடந்ததால் அதற்கு ஓய்வு அளித்து வனத்துறை உத்தரவு.


கோவை: கும்கிகளின் அரசன் என்று அழைக்கப்படும் கலீம் என்ற கும்கி யானைக்கு ஓய்வு அளித்து வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் அருகே கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த யானைகள் வளரும் முகாமில் 26 யானைகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இங்குள்ள யானைகளுக்கு பாகன்கள் நியமிக்கப்பட்டு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இந்த யானைகள் பல்வேறு வன பணிகளுக்கும் வனப்பகுதியை விட்டு வெளியேறி அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடிக்கவும் கும்கிகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.



இதில், குறிப்பாக டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் உள்ள கலீம் என்ற கும்கி யானை தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் காட்டு யானைகளை பிடிக்கும் ஆபரேஷன்களில் பங்கெடுத்து வெற்றிகளை பெற்றுள்ளது.



இந்த நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் முதன்மைச் செயலர் சுப்ரியா சாஹீ மற்றும் வனத்துறை முதன்மை தலைமை பாதுகாவலர் சீனிவாச ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



இதைத்தொடர்ந்து, உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் அருகே உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமுக்கு அதிகாரிகள் சென்றனர். அங்கு பல்வேறு வனப்பணிகளுக்காகவும், கும்கி ஆப்ரேஷன்களுக்கு, பயன்படுத்தப்பட்டு வந்த 60 வயது பூர்த்தி அடைந்த கும்கிகளின் அரசன் என்று அழைக்கப்படும் கும்கி யானை கலீமுக்கு ஓய்வு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வனத்துறை உயர் அதிகாரிகள், பாகன்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு யானைக்கு மரியாதை செலுத்தினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...