துடியலூர் அருகே ஏர் பேக் திறந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் மீது மோதி விபத்து!

கோவை கே.என்.ஜி.புதூர் சாலையில் சென்ற கார் ஒன்று மாரியம்மன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதிய நிலையில், திடீரென காரின் ஏர் பேக் திறந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே ஏர்பேக் திறந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவில்மேடு தவசி நகர் பகுதியை சேர்ந்தவர் மருதாச்சலம் மூர்த்தி (37). சொந்தமாக தொழில் செய்து வரும் இவர் இன்று பிற்பகல் தனது காரில் கே.என்.ஜி புதூர் பகுதியில் இருந்து ஜி.என்.மில்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் காரை வேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மருதாச்சலம் மூர்த்தி கே.என்.ஜி புதூர் மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஐயன்(40) என்பவர் படுகாயம் அடைந்தார்.



இந்நிலையில் விபத்தின் போது காரில் இருந்த ஏர் பேக் திடீரென திறந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் வலது புறத்தில் இருந்த வீட்டின் மீது மோதி நின்றது. இதில் நல்வாய்ப்பாக வீட்டின் அருகே இருந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.



இச்சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீசார் மருதாச்சலம் மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...