கோவையில் பொதுத்தேர்வு வினாத்தாளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு!

11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் கோவை கொண்டு வரப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 12 மையங்களில் வினாத்தாள் கட்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.


கோவை: கோவை மாவட்டத்தில், 12 மையங்களில் வினாத்தாள் கட்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரையிலும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரையிலும் நடைபெறும்.

இதேபோல் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி கோவை மாவட்டத்தில் 254 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 35,541 மாணவர்களும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 34,259 மாணவர்களும் எழுத உள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வை, 41, 526 மாணவர்கள் எழுத உள்ளனர்.

இதையொட்டி, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் சென்னையில் இருந்து கோவைக்கு அரசு தேர்வுத்துறை மூலம் கொண்டு வரப்பட்டது. இந்த வினாத்தாள்கள் கோவை, பொள்ளாச்சி ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

இந்த வினாத்தாள்கள் கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஆவண மையங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன. அதன்படி, பொதுத்தேர்வுக்கான இந்த வினாத்தாள்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய போலீசார் சுழற்சி முறையில் அங்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல் கோவை மாவட்டத்தில் மேலும் 11 இடங்களில் வைக்கப்பட்டுள்ள வினாத்தாள் அறைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் விரைவில் கோவைக்கு கொண்டு வரப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...