துடியலூர் சாய்பாபா கோயில் திருவிழா - 108 பால்குடம் சுமந்து வந்த பெண்கள்!

கோவை துடியலூர் அடுத்த ஜெங்கமநாயக்கன்பாளையம் சுமங்கலி நகரில் உள்ள ஸ்ரீ குபேர ஷீரடி சாய்பாபா கோயிலின் 4 ஆம் ஆண்டு திருவிழாவில் 108 பெண்கள் ஊர்வலமாக கொண்டு வந்த பால்குடங்களை சாய்பாபா மீது ஊற்றி பாலாபிஷேகம் செய்யப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே சாய்பாபா கோவிலின் 4ஆம் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

துடியலூரை அடுத்துள்ள ஜெங்கமநாயக்கன்பாளையம் சுமங்கலி நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ குபேர ஷீரடி சாயிபாபா கோவில் உள்ளது. இக்கோவிலின் 4ம் ஆண்டு விழா இன்று காலை விக்னேஷ்வர பூஜை, லட்சுமி குபேர ஹோமம் பூஜையுடன் தொடங்கியது.



இந்த விழாவில் தொப்பம்பட்டி அரசடி ராஜகணபதி கோயிலில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் என 108 பேர் பால் குடம் எடுத்து வந்தனர்.



இந்த பால் குட ஊர்வலமானது தொப்பம்பட்டியில் இருந்து ஜங்கமநாயக்கன்பாளையம் சுமங்கலி நகர் சாய்பாபா கோயிலுக்கு வரும் வழியில் உள்ள மாகாளி அம்மன் கோவிலில் வழிபட்ட பின் கோவிலை வந்தடைந்தனர்.



108 கலச பால்குடங்களை சாய்பாபா மீது ஊற்றி அபிஷேக பூஜை ஆராதனை நடைபெற்றது.



தொடர்ந்து சிறப்பு பூஜைகள் தீபராதனை வழிபாடு நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



மேலும், இதில் நடைபெற்ற பஜனை பாடல் இசை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 



பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் சுரேஷ்குமார், கார்த்தி மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...