கோவையில் கழிவுநீர் சாக்கடையில் விழுந்த பசுமாடு - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை!

கோவை சவுரிபாளையத்தில் கழிவுநீர் சாக்கடையில் தவறி விழுந்த பசு மாட்டை, பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு கருவிகள் மூலம் சாக்கடையை உடைத்து பத்திரமாக மீட்கப்பட்டது. தீயணைப்புத்துறை வீரர்களுக்கு மாட்டின் உரிமையாளர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.



கோவை: கோவை சவுரிபாளையம் பகுதி அன்னை வேளாங்கண்ணி நகரில் பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்காக சென்றபோது அங்கிருந்த கழிவுநீர் சாக்கடையில் தவறி விழுந்துள்ளது. சாக்கடைக்குள் விழுந்த பசு மாடு வெளியேற்ற இயலாததால், இது குறித்து உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.



அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தெற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர், கருவிகள் மூலம் அந்த சாக்கடையை உடைத்து பசுமாட்டை பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த மாட்டை தீயணைப்புத்துறையினர் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.



சாக்கடையில் விழுந்த பசுவை பத்திரமாக மீட்டுக்கொடுத்த தீயணைப்புத் மற்றும் மீட்பு பணித்துறையினருக்கு மாட்டின் உரிமையாளர் கண்ணீர் மல்க நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...