கோவையில் கழிவுநீர் சாக்கடையில் விழுந்த பசுமாடு - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை!

கோவை சவுரிபாளையத்தில் கழிவுநீர் சாக்கடையில் தவறி விழுந்த பசு மாட்டை, பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு கருவிகள் மூலம் சாக்கடையை உடைத்து பத்திரமாக மீட்கப்பட்டது. தீயணைப்புத்துறை வீரர்களுக்கு மாட்டின் உரிமையாளர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.



கோவை: கோவை சவுரிபாளையம் பகுதி அன்னை வேளாங்கண்ணி நகரில் பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்காக சென்றபோது அங்கிருந்த கழிவுநீர் சாக்கடையில் தவறி விழுந்துள்ளது. சாக்கடைக்குள் விழுந்த பசு மாடு வெளியேற்ற இயலாததால், இது குறித்து உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.



அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தெற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர், கருவிகள் மூலம் அந்த சாக்கடையை உடைத்து பசுமாட்டை பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த மாட்டை தீயணைப்புத்துறையினர் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.



சாக்கடையில் விழுந்த பசுவை பத்திரமாக மீட்டுக்கொடுத்த தீயணைப்புத் மற்றும் மீட்பு பணித்துறையினருக்கு மாட்டின் உரிமையாளர் கண்ணீர் மல்க நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...