கோவையில் கழிவுநீர் சாக்கடையில் விழுந்த பசுமாடு - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை!

கோவை சவுரிபாளையத்தில் கழிவுநீர் சாக்கடையில் தவறி விழுந்த பசு மாட்டை, பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு கருவிகள் மூலம் சாக்கடையை உடைத்து பத்திரமாக மீட்கப்பட்டது. தீயணைப்புத்துறை வீரர்களுக்கு மாட்டின் உரிமையாளர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.



கோவை: கோவை சவுரிபாளையம் பகுதி அன்னை வேளாங்கண்ணி நகரில் பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்காக சென்றபோது அங்கிருந்த கழிவுநீர் சாக்கடையில் தவறி விழுந்துள்ளது. சாக்கடைக்குள் விழுந்த பசு மாடு வெளியேற்ற இயலாததால், இது குறித்து உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.



அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தெற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர், கருவிகள் மூலம் அந்த சாக்கடையை உடைத்து பசுமாட்டை பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த மாட்டை தீயணைப்புத்துறையினர் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.



சாக்கடையில் விழுந்த பசுவை பத்திரமாக மீட்டுக்கொடுத்த தீயணைப்புத் மற்றும் மீட்பு பணித்துறையினருக்கு மாட்டின் உரிமையாளர் கண்ணீர் மல்க நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

Newsletter

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...