டாஸ்மாக் டெண்டர் விவகாரம் - அறப்போர் இயக்கத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை!

டாஸ்மாக் டெண்டர் விவகாரம் தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டு அறிக்கையை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரித்துள்ளார்.



கோவை: கோவை கருமத்தம்பட்டியில், விசைத்தறியாளர்கள் ஏற்பாடு செய்துள்ள நன்றி தெரிவிக்கும் பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் நாளை பங்கேற்க உள்ளார். இந்த விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



தமிழக முதல்வருக்கு விசைத்தறி நெசவாளர்கள் சார்பில் கருமத்தம்பட்டியில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதில், பல ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் கலந்துகொள்கின்றனர். விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

டாஸ்மாக் டெண்டர் தொடர்பாக அறப்போர் இயக்கம் ஜெயராமன் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு அறிக்கையை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் அவர் மீது வழக்கறிஞர் மூலம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இடைத்தேர்தல் நடைபெற்றதால், ஈரோடு நீங்களாக, 43 குடோனில் இருந்து மொத்தம் 96 கோடி ரூபாய்கான வருட டெண்டர் அறிவிப்பில் வழக்கமான நடைமுறையே பின்பற்றப்பட்டது. அறப்போர் இயக்கத்தின் மீது மிகுந்த மரியாதை உள்ளது.

ஆயிரம் கோடி ரூபாய் டெண்டர் என்பது அபத்தமானது. அவர் கூறியதை திரும்ப பெறவில்லை எனில் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். அப்போது, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் எம்.பி நாகராஜ், நித்தியா மனோகரன், ஏர்போர்ட் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...