கனிமவளக் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்..! - கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும். இல்லாவிடில் மீண்டும் போராட்டம் நடக்கும் என்று கோவை எட்டிமடை பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.



கோவை: கடந்த இரு மாதங்களுக்கு முன் தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் இருந்து கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக பல்வேறு வீடியோக்கள் வெளியானது.

அதிலும் குறிப்பாக கோவை மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு அதிகப்படியான கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக பல்வேறு விவசாய சங்கங்கள் அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று எட்டிமடை பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



அச்சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் பங்கேற்றனர்.



ஆனால் முதலமைச்சர் வருகையையொட்டி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளதாகவும் கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பாமல் அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் கனிம வள கொள்ளையை தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்ப்பட்டது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி, கனிமவள கொள்ளை தடுக்கப்பட வேண்டும். தனி வசூலை நிறுத்த வேண்டும். இயற்கையை பாதுகாக்க வேண்டும். அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகளை தடுக்க வேண்டும். இது போன்ற செயல்களால் நிலநடுக்கம், நிலச்சரிவு வரும் பட்டியலில் கோவை இருந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் கனிமவளக் கொள்ளையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மீண்டும் போராட்டம் மேற்கொள்வோம், என்றார்.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...