கோவையில் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கருத்தரங்கம்

கோவையில் நவீன இணையவழி பண மோசடி குற்றங்கள், அதன் வகைகள், அதிலிருந்து தற்காத்தும் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் சமூக வலைதளத்தை கவனமாக கையாளும் வழிமுறைகள், Cryptocurrency, Bitcoin தொடர்பான விழிப்புணர்வுகள் குறித்து கருத்தரங்கில் விளக்கப்பட்டன.


கோவை: கோவையில் சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கருத்தரங்கம் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், தலைமையில் நடைபெற்றது.

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், தலைமையில் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) சுகாசினி, சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் மற்றும் காவல் ஆய்வாளர் அருண் தலைமையிலான காவல்துறையினர் மூலம் நவீன இணையவெளி குற்றங்கள் மற்றும் எதிர்கால இணைய வழி குற்ற அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பான கருத்தரங்கம் நடத்தப்பட்டது.



இதில், நவீன இணையவழி பண மோசடி குற்றங்கள், அதன் வகைகள், அதிலிருந்து தற்காத்தும் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் சமூக வலைதளத்தை கவனமாக கையாளும் வழிமுறைகளும், Cryptocurrency, Bitcoin தொடர்பான விழிப்புணர்வுகள், பாதுகாப்பான பண பரிமாற்றத்திற்கான வழிமுறைகள் மற்றும் Online பண பரிமாற்றத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.



மேற்படி விழிப்புணர்வு கூட்டத்தில் கோவை மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளை சேர்ந்த வங்கி ஊழியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் தொழில்துறை நிர்வாகிகள் என மொத்தம் சுமார் 70-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...