கோவையில் சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியில் ராணுவ வீரர்கள் சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவியேற்பு

கோவை ராக்கிபாளையம் பிரிவு சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியில் சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சி முடித்த 19 ராணுவ வீரர்களுக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரியின் ஐ.ஜி மற்றும் முதல்வர் அஜய் பரதன் கலந்துக் கொண்டு வீரர்களின் அணிவகுப்பு, மரியாதை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு பேட்சுகளை வழங்கி கெளரவித்தார்.



கோவை: ராக்கிபாளையம் பிரிவு சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியில் சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சி முடித்த 19 ராணுவ வீரர்களுக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.

இந்தியா ராணுவம், விமானத்துறை மற்றும் கப்பற்படையில் பணியாற்றி முடித்த 45 வயது பூர்த்தி அடையாத வீரர்கள் மீண்டும் சி.ஆர்.பி.எப்-ல் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து கோவை சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரியில் 95ஆவது பேட்சில் சப்-இன்ஸ்பெக்டர்களாக சேர 11 ராணுவ வீரர்கள், 5 விமானத்துறை வீரர்கள், 3 கப்பற்படை வீரர்கள் கலந்துக்கொண்டு கடந்த 2 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தனர்.



பயிற்சி முடித்த அவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அதற்காக நடைபெற்ற விழாவில், கோவை சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரியின் ஐ.ஜி மற்றும் முதல்வர் அஜய் பரதன் கலந்துக் கொண்டு வீரர்களின் அணிவகுப்பு, மரியாதை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு பேட்சுகளை வழங்கி கெளரவித்தார்.



முன்னதாக கமெண்டண்ட் ராஜேஷ்குமார் உறுதிமொழி வாசிக்க பதவியேற்ற வீரர்கள் தங்கள் கைகளை நீட்டி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து இந்தியா தேசிய கொடி மற்றும் சி.ஆர்.பி.எப் கொடி முன்பும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.



தொடர்ந்து அவர்களுடன் ஐ.ஜி. குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.



இந்த விழாவில் டி.சி. ராஜேஷ் டாக்ரா, அசிஸ்டண்ட் கமெண்டண்ட் கிசோர்குமார் உட்பட சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். பதவி ஏற்றுக்கொண்ட 19 சப்-இன்ஸ்பெக்டர்களும் ஜம்மு-காஷ்மீர், சண்டிகர் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...