கோவையில் சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியில் ராணுவ வீரர்கள் சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவியேற்பு

கோவை ராக்கிபாளையம் பிரிவு சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியில் சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சி முடித்த 19 ராணுவ வீரர்களுக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரியின் ஐ.ஜி மற்றும் முதல்வர் அஜய் பரதன் கலந்துக் கொண்டு வீரர்களின் அணிவகுப்பு, மரியாதை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு பேட்சுகளை வழங்கி கெளரவித்தார்.



கோவை: ராக்கிபாளையம் பிரிவு சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியில் சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சி முடித்த 19 ராணுவ வீரர்களுக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.

இந்தியா ராணுவம், விமானத்துறை மற்றும் கப்பற்படையில் பணியாற்றி முடித்த 45 வயது பூர்த்தி அடையாத வீரர்கள் மீண்டும் சி.ஆர்.பி.எப்-ல் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து கோவை சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரியில் 95ஆவது பேட்சில் சப்-இன்ஸ்பெக்டர்களாக சேர 11 ராணுவ வீரர்கள், 5 விமானத்துறை வீரர்கள், 3 கப்பற்படை வீரர்கள் கலந்துக்கொண்டு கடந்த 2 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தனர்.



பயிற்சி முடித்த அவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அதற்காக நடைபெற்ற விழாவில், கோவை சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரியின் ஐ.ஜி மற்றும் முதல்வர் அஜய் பரதன் கலந்துக் கொண்டு வீரர்களின் அணிவகுப்பு, மரியாதை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு பேட்சுகளை வழங்கி கெளரவித்தார்.



முன்னதாக கமெண்டண்ட் ராஜேஷ்குமார் உறுதிமொழி வாசிக்க பதவியேற்ற வீரர்கள் தங்கள் கைகளை நீட்டி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து இந்தியா தேசிய கொடி மற்றும் சி.ஆர்.பி.எப் கொடி முன்பும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.



தொடர்ந்து அவர்களுடன் ஐ.ஜி. குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.



இந்த விழாவில் டி.சி. ராஜேஷ் டாக்ரா, அசிஸ்டண்ட் கமெண்டண்ட் கிசோர்குமார் உட்பட சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். பதவி ஏற்றுக்கொண்ட 19 சப்-இன்ஸ்பெக்டர்களும் ஜம்மு-காஷ்மீர், சண்டிகர் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...