கோவையில் பீகார் தொழிலாளி மீது தாக்குதல் - டாஸ்மாக் பார் ஊழியர் கைது!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் பீகார் தொழிலாளி திலீப் கேவட்டை தாக்கிய, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த டாஸ்மாக் பார் ஊழியர் பிரசன்னகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம், அன்னூர் அருகே காட்டம்பட்டியில் தங்கி, தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருபவர் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த திலீப் கேவட்(வயது 34). இவர் நேற்று மாலை கணேசபுரத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடிக்க சென்றுள்ளார்.

அப்போது, அங்கு சப்ளையராக பணிபுரிந்து வரும் சிவகங்கையை சேர்ந்த ஜேசுவின் மகன் பிரசன்ன குமார் (வயது24) என்பவர் வெளியில் இருந்து தண்ணீர்பாட்டில் கொண்டு வந்தது ஏன் என்று கேட்டு வாக்குவாதம் செய்து, திலீப் கேவட்டை அடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து திலிப் கேவட்ட அளித்த புகாரின் பேரில், அன்னூர் போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து பிரசன்னகுமாரை கைது செய்து, நீதிபதி மோனிகா முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...