மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.9 லட்சம் மோசடி - போலீசார் விசாரணை

மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த கார் மெக்கானிக் அசோக்குமாரிடம் 9 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த பிரசாந்த் உத்தமன் என்ற நபரை கோவை போலீசார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


கோவை: மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சார்ந்தவர் அசோக் குமார்(வயது30). இவர் கார் மெக்கானிக்காக ஷோரூம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு அறிமுகமான நபர் ஒருவர், பிரசாந்த் உத்தமன் என்ற நபரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பிரசாந்த் உத்தமன் ஸ்கவுட் பிரிவில் மாநில அளவில் உயர் பொறுப்பில் இருப்பதாக தெரிவித்து அறிமுகப்படுத்திக்கொண்டதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் உள்ள துறை ஒன்றில் ஸ்கவுட் மாஸ்டர் வேலை காலியாக இருப்பதாகவும், அதனை வாங்கி தருவதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இதற்காக பணம் செலவாகும் என்று தெரிவித்த பிரசாந்த் உத்தமன், அசோக் குமாரிடம் இருந்து 2020 ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது சிறுக சிறுக 9 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ஸ்கவுட் மாஸ்டர் வேலை கிடைத்தது போன்ற போலி பணி ஆணையை பிரசாந்த் உத்தமன் ஏற்பாடு செய்து, அசோக்குமாரிடம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த பணி ஆணை போலி என்பது தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்த அசோக்குமார், சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பிரசாந்த் உத்தமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...