வாயில்லா ஜீவன்களுக்காக கோவை மாநகர காவல்துறை எடுத்த முயற்சி!

கோவை மாநகர காவல்துறை மற்றும் தனியார் தன்னார்வ அமைப்புகள் இணைந்து காவல் நிலையங்களின் மேற்கூரைகளில் பறவைகளுக்குத் தண்ணீர் வைப்பதற்கு ஏதுவான மண் குவளைகள் வழங்கும் நிகழ்வு, காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மண் குவளைகளை காவல் ஆய்வாளர்களிடம், ஆணையர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.



கோவை: கோடை காலத்தையொட்டி காவல் நிலைய மேற்கூரைகளில் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதற்கான மண் மண் குவளைகளை காவல் ஆய்வாளர்களிடம், ஆணையர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.



கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தனியார் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து காவல் நிலையத்தின் மேற்கூறையில் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதற்கு ஏதுவான மண் குவளைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட பீப்பிள் ஃபார் கேட்டில் இன் இந்தியா, ராயல் செயின், நேச்சர் அனிமல் கன்வரன்சி, என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மாநகர போலீசாருக்கான 100 மண் குவளைகளை வழங்கினர்.



மேலும் இந்த அமைப்பினர் சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், சென்னை, திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளில் வளர்ப்பு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பொது இடங்களில் தண்ணீர் குடிப்பதற்கான மண் குவளைகள் வைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர பகுதியில் பறவைகளுக்கு கோடைக்காலத்தில் தண்ணீர் வைப்பதற்கான திட்டத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கோடைக்காலத்தை முன்னிட்டு இந்த பணியைச் செய்வதாகவும், பறவைகளுக்கும் வளர்ப்பு விலங்குகளுக்கும் தண்ணீர் அத்தியாவசியம் என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...