பல்லடம் அரசுக்கலை கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு மன்றம் தொடக்கம்

போதை பொருள் பயன்பாட்டிலிருந்து மாணவர்களை பாதுகாக்கவும் போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு மன்ற துவக்க விழா நடைபெற்றது.



திருப்பூர்: பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு மன்ற துவக்க விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் பயன்பாட்டிலிருந்து மாணவர்களை பாதுகாக்கவும் போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போதைப் பொருள் தடுப்பு மன்றம் துவக்க விழா இன்று நடைபெற்றது.



இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனியன், பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன், பல்லடம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பர்வீன் பானு, சமூக ஆர்வலர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். போதைப் பொருள் தடுப்பு மன்றத்தினை காவல் ஆய்வாளர்கள் துவக்கி வைத்தனர்.



விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளிடையே காவல் ஆய்வாளர் பர்வீன் பானு பேசுகையில், அனைத்து குற்றச் சம்பங்களுக்கும் முதல் காரணமாக அமைவது போதைப் பொருட்கள் தான், வலிமையான இளைய தலைமுறையை உருவாக்க போதை பழக்கத்திலிருந்து மாணவர்கள் தள்ளி இருக்க வேண்டும், கஞ்சா, மது போன்ற போதை பழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாகி விட வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.



இந்நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...