ரியல், ரீல் ரவுகளை தட்டித் தூக்கிய தனிப்படை - அடிதடி சண்டையில் ஆயுதங்கள் பயன்படுத்தியது அம்பலம்

கோவையில் சமூகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுவந்த ரியல் மற்றும் ரீல் ரவுடி கும்பலை சேர்ந்த 13 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.


கோவை: கோயமுத்தூரில் சமீபத்தில் கோகுல், சத்திய பாண்டி இருவர் சக ரவுடி போட்டி கும்பலால் வெட்டி சாய்த்து கொல்லப்பட்டிருக்கின்றனர் . இந்த நிலையில் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் ரவுடிகளை அடக்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் துணை ஆணையாளர் சந்தீஸ், உதவி ஆணையாளர் ரவி, இன்ஸ்பெக்டர் தெய்வமணி அடங்கிய தனிப்படை போலீசார் ஆர்.எஸ்.புரம் பகுதி ரவுடிகளை கைது செய்ய திட்டமிட்டனர். அதனடிப்படையில் சமீபத்தில் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள திரையரங்கில் நடந்த அடிதடி தொடர்பாக 30 நபர்களை போலீசார் அடையாளம் கண்டனர்.

அவர்கள் சண்டையில் ஆயுதங்களை பயன்படுத்தியது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது.

இந்த நிலையில் குற்ற பின்னணியில் உள்ளவர்களின் பட்டியலை தயார் செய்த தனிப்படை போலீசார், ஒரே நாளில் ஜார்ஜ் ஸ்டீபன், ஜாபர் (எ) ராகுல்ராம், செல்வகுமார், உதயகுமார், கேசவன், சுப்பிரமணியன், வாசன், சூர்யா, சக்திவேல், சரவணன், சபரி ராஜ், பிரகாஷ், பிரதீப் குமார் உள்ளிட்ட 13 நபர்களை கைது செய்தனர்.

சட்டம் ஒழுங்கை பாதுக்காக்கும் பொருட்டு ரவுடிகளுக்கு சமூக வலைதள ரீல் ரவுடிகள், அடிதடி, கட்டபஞ்சாயத்து ரவுடிகள் என தாதாக்களின் கும்பலின் குற்றச்செயல்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில், தனிப்படை போலீசார் நடத்தும் இந்த தீவிர வேட்டை, ரவுகளை பீதியடையச் செய்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...