கோவையில் கொளுத்தும் வெயில் - நீர் சத்து மிக்க பழங்கள் விற்பனை அமோகம்!

கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் வெயில் கொளுத்துவதால், நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, முலாம் பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களின் விற்பனை அதிரித்துள்ளது மட்டுமல்லாமல், பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி மற்றும் முலாம் பழம் ஆகியவற்றி விற்பனை அமோகமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோடை காலத்தில் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை ஈடுசெய்ய நீர்ச்சத்து நிறைந்த ஆகாரங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியது அவசியம்.

உடலில் நீர்ச்சத்தின் அளவை பராமரிக்கா விட்டால் தலைவலி, பசியின்மை, சரும பாதிப்பு, சோர்வு, தசை பிடிப்பு, ரத்த அழுத்த குறைவு, இதய துடிப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். சிலவகை பழங்கள், காய்கறிகள், தானியங்கள் இயற்கையாகவே நீர்ச்சத்தை அதிகம் கொண்டிருக்கின்றன.

அவைகளுள் ஏதாவது ஒன்றையாவது தினமும் தவறாமல் சாப்பிட வேண்டும். 80 சதவீதத்துக்கும் மேலாக நீர்ச்சத்தை மட்டுமே உள்ளடக்கிய பழங்களும் இருக்கின்றன. பிளம்ஸ் பழம் 85 சதவீதம் நீர்ச்சத்து கொண்டது. வியர்வையால் ஏற்படும் நீர் இழப்பை ஈடுசெய்யும் வல்லமை கொண்டது.

ஆப்பிள் பழத்தில் 86 சதவீதம் நீர் சத்து இருக்கிறது. சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் ஆப்பிள் பழம் சாப்பிடுவது உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். அன்னாசி, ஆரஞ்சு பழங்கள் 87 சதவீதம் நீர் சத்து கொண்டவை. முலாம் பழம் 90 சதவீதம் நீர்சத்து கொண்டது. இது கோடை வெப்பத்தை விரட்டி அடித்து உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் தன்மை கொண்டது. ஸ்ட்ராபெர்ரி பழங்கள் 92 சதவீதம் நீர் சத்து கொண்டவை. தர்பூசணியில் 92 சதவீதம் நீர் சத்து உள்ளது.

கோவையில் தற்போது வெயில் சுட்டெரிப்பதால் நீர்ச்சத்து மிக்க பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக தர்பூசணி, முலாம் பழம், கிர்ணிப்பழம், சாத்துக்குடி பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

இதற்காக உள்ளூரில் இருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் பழங்கள் கொண்டு வரப்பட்டு கோவை மார்க்கெட்டுகளில் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. விற்பனை அதிகரிப்பால் பழங்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

தியாகி குமரன் மார்க்கெட்டில் முலாம் பழம் ஒரு கிலோ ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மொத்த மார்க்கெட்டுகளில் அதன் விலை சற்று குறைந்து காணப்பட்டது. இதேபோல ஆப்பிள் ஒரு கிலோ 100-ல் இருந்து 160-க்கும், சாத்துக்குடி 60-ல் இருந்து 70-க்கும், கருப்பு திராட்சை 50-ல் இருந்து 80-க்கும், வெள்ளை திராட்சை 50 முதல் 100க்கும், மாதுளை ஒரு கிலோ 150 முதல் 200க்கு, கொய்யா 60 லிருந்து 70-க்கும், எலுமிச்சை ஒரு கிலோ 80-ல் இருந்து 120-க்கும், விற்பனை செய்யப்படுகிறது.

முலாம்பழம் ஒரு கிலோ ரூ.40, அன்னாசி ரூ.60, ஆரஞ்சு ரூ.80, மாம்பழம் செந்தூரம் ரூ.120, பங்கன பள்ளி ரூ.150, சப்போட்டா ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், எலுமிச்சை பழம் விற்பனையும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...