தமிழ்நாடு பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?

தமிழக அரசு 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், வைகோவும், கமல்ஹாசனும், தமிழகம் இந்தியாவிற்கு முன்னோடியாக இருப்பதாகவும், பழனிசாமி, டிடிவி தினகரனும், மக்களை ஏமாற்றும் வகையிலான பட்ஜெட் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.



சென்னை: தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவாகவும், விமர்சித்தும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர்:



தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை என அறிவித்து விட்டு, தகுதியானவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும் என பட்ஜெட்டில் கூறியுள்ளனர். ஆனால், என்ன தகுதி என்பதை வெளியிடவில்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் மின்மினிப்பூச்சி போலத்தான், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வெளிச்சம் தராது. கானல் நீர் தாகம் தீர்க்காது.

வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்:



மத்திய அரசைக் காட்டிலும், நிதி பற்றாக்குறையைக் குறைத்திருப்பது திமுக அரசின் திறன்மிக்க நிதி மேலாண்மைக்குச் சான்று. இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக முன்னேற்றப் பாதையில் நடைபோடுவதை இந்த நிதிநிலை அறிக்கை உறுதி செய்துள்ளது.

ராமதாஸ், பாமக நிறுவனர்:



ரூ.1000 மகளிர் உரிமைத் திட்டம், காலை உணவு விரிவாக்க திட்டம், வளமிகு வட்டாரங்கள் ஆகிய திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.77,000 கோடியில் 14,500 மெகாவாட் நீரேற்று மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த திட்டங்கள் எப்போது செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.

டி.டி.வி.தினகரன், அமமுக பொதுச் செயலாளர்:



தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் தகுதியான பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது தகுதியை உள்ளே சேர்த்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல்ஹாசன், மக்கள் நீதிமய்யம் தலைவர்:



இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் புரட்சிகரமான திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத் தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...