'உதய் எக்ஸ்பிரஸ்' ரயிலுக்கான பெட்டிகள் (கோச்) கிடைப்பதில் தாமதம் ஆகிறது -சேலம் கோட்ட தெற்கு ரெயில்வே மேலாளர்

கோவையில் இருந்து பெங்களூருவிற்கு இரவுநேர எக்ஸ்பிரஸ் ரயில் விடவேண்டும் என கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகவும், தொழில்துறையினர் சார்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கோவைக்கு வந்து இருந்த மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவிடம், இந்திய தொழில் வர்த்தகசபை மற்றும் தொழில் கூட்டமைப்பினர் நேரில் வேண்டுகோள் விடுத்தனர். டெல்லியிலும் அவரை சந்தித்து இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. 



இதைத்தொடர்ந்து, கோவை–பெங்களூரு இடையே 'உதய் எக்ஸ்பிரஸ்' ரயில் இயக்கப்படும் என்று சென்ற வருடம்  அறிவித்தார். இந்நிலையில், புதிய ரயிலுக்கான நேர விவரம் இதன்படி கோவை–பெங்களூரு புதிய ரயில் பகல்நேர ரயிலாக இயக்கப்பட உள்ளதாகவும், கோவையில் இருந்து 22666 என்ற எண்ணுள்ள உதய் எக்ஸ்பிரஸ் காலை 5.45 மணிக்கு புறப்பட்டு பகல் 12.40 மணிக்கு பெங்களூரு போய் சேருகிறது. இதேபோல் பெங்களூரில் இருந்து 22665 என்ற உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோவை வந்தடைகிறது. புதிய ரயில் இயக்கப்படுவதற்கான தேதி விவரம் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில், 2017ம் ஆண்டில் ஜனவரி மாதம் கோவையில் 'உதய் எக்ஸ்பிரஸ்' விடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. 

இது குறித்து சேலம் கோட்ட தெற்கு ரெயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா கூறுகையில்; கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ள 'உதய் எக்ஸ்பிரஸ்' ரயிலுக்கான பணிகள் நடந்து வருகிறது. உதய் எக்ஸ்பிரஸ் (குளிர்சாதனை டபுள் டக்கர் ரயில்) ரயில் எண் - 22666 - 22665 கோவை - கேஎஸ்ஆர் பெங்களூரு - கோவை அதிவிரைவு ரயில். இந்த ரயில் வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும். பயணநேரம், கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. ஆனால் இந்த ரயிலுக்கான பெட்டிகள் (கோச்) கிடைப்பதில் தாமதம் நிலவி வருகிறது. தற்போது வரை ஒரு சில பெட்டிகள் மட்டுமே உள்ளது. விரைவில் இந்த ரயில் இயக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...