கோவையில் அடுத்தடுத்து 8 கடைகளில் கொள்ளை - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

கோவை எட்டிமடை கடைத்தெருவில் உள்ள அடுத்தடுத்து 8 கடைகளின் பூட்டை உடைத்து பணம், மற்றும் சிசிடிவி ஹார்டுடிஸ்க்குகளை திருடிச் சென்ற மர்ம கும்பலை க.க.சாவடி போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


கோவை: கோவை க.க.சாவடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எட்டிமடை பகுதியில் உள்ள கடைத்தெருவில் அடுத்தடுத்து 8 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பணம் மற்றும் 3 கடைகளில் இருந்த சிசிடிவி பதிவு ஹார்டிஸ்க்குகளை திருடிச் சென்றுள்ளனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், எட்டிமடை பகுதியில் உள்ள எதிர் எதிரே அமைந்துள்ள 2 வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் பேக்கரி, போட்டோ ஸ்டுடியோ, செல்போன் கடை, ஹார்வேர்ஸ், சலூன், மளிகை கடை, பேன்ஸி கடை என அடுத்தடுத்து 8 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ.45 ஆயிரம் பணம் மற்றும் சிசிடி ஹார்டுடிஸ்க்குகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் கடைகளில் பதிவான கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். மேலும், இந்த திருட்டு சம்பவங்கள் அதிகாலை சுமார் காலை 4 மணி முதல் 5 மணிக்குள் நடத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டிமடை பகுதியில் அடுத்தடுத்து 8 கடைகளில் கைவரிசை காட்டிய மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொடர் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...