கோவை அருகே மின்கம்பத்தின் மீது கார் மோதி விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்!

விளாங்குறிச்சி அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் ஐடி ஊழியர்களை இறக்கி விட்டு சென்ற இன்னோவா கார், ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.



கோவை: கோவை மாவட்டம் விளாங்குறிச்சி அருகே கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

கோவை அடுத்த விளாங்குறிச்சி சாலை பால்காரர் தோட்டம் பேருந்து நிலையம் அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் இன்னோவா கார் ஒன்று ஐ.டி. நிறுவன ஊழியர்களை இறக்கி விட்டு திரும்பியுள்ளது.

அப்போது அந்த வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக தெரிகிறது.



அப்போது திடிரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில் மின் கம்பம் முறிந்து மின் கம்பிகள் துண்டானது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார். விபத்து நடந்தவுடன் மின் விநியோகம் உடனடியாக தடைபட்டதாலும், அதிகாலை நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.



இதையடுத்து அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், புதிய மின் கம்பிகளை மாற்றி, மின் கம்பத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...