பணிக்கொடை வழங்காத தனியார் நிறுவனத்தை கண்டித்து கோவை வட்டாசியர் அலுவலகம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


30 ஆண்டுகளாக பணிக்கொடை வழங்காத தனியார் நிறுவனத்தைக் கண்டித்து அந்நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் கோவை தெற்கு வட்டாசியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவையில் செயல்பட்டு வந்த நவஇந்தியா நிறுவனம், நிர்வாக குறைபாடு காரணமாக மூடப்பட்டது. இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடையை வழங்காததால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து சில ஆண்டுகளுக்கு முன் 50 சதவிகித பணிக்கொடை வழங்கப்பட்டது. அதன் பிறகு வழங்க வேண்டிய மீதம் 50 சதவிகித தொகையை இது வரை வழங்காமல் அந்நிறுவனம் காலம் தாழ்த்துவதை கண்டித்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் இன்று கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நவஇந்தியா நிறுவனத்தில் பணியாற்றிய 180 ஊழியர்களுக்கு இது வரை முழுமையான பணிக்கொடை வழங்கவில்லை. அதில் சில ஊழியர்கள் தற்போது இறந்துவிட்டதால் அந்த தொகையை அவர்களது குடும்பத்தாருக்கு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், எங்களது கோரிக்கைகளை ஏற்று நவஇந்தியா நிறுவனம் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடவுள்ளதாகவும், தொடர்ந்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...