கோவையில் கைது செய்யப்பட்ட மாவோய்ஸ்ட்டுகளின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகள் 5 பேரின் நீதிமன்ற காவலை மார்ச் 7ம் தேதி வரை நீடித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் உத்திரவிட்டார்.

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ரூபேஷ், சைனா, வீரமணி, அனூப், கண்ணன் ஆகிய 5 மாவோயிஸ்ட்டுகள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அரசுக்கு எதிராக சதிதிட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் மாவோயிஸ்ட்டுகள் 5 பேரும் இன்று கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த ஐந்து பேரும் சட்டமன்றம், நாடாளுமன்றங்களை விமர்சனம் செய்து முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் வழக்கு விசாரணையின் போது, மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்ட போது அவர்களுக்கு எதிராக சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இருப்பதாகவும், அவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தரவேண்டும் எனவும் மாவோயிஸ்டுகளின் வழக்கறிஞரான பாலமுருகன் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து வழக்கை வருகிற மார்ச் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, சைனா, வீரமணி, அனூப், கண்ணன் ஆகிய 4 பேரை மீண்டும் கோவை மத்திய சிறைக்கும், ரூபேஸ் என்ற மாவோயிஸ்ட்டை கேரள சிறைக்கும் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...