ஆசிட் வீச்சு விவகாரம்: ஆசிட்டை விற்பனை செய்தது யார் என விசாரிக்க வேண்டும் - மாதர் சங்கம் வலியுறுத்தல்!

கோவை நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் சுகந்தி, வீசப்பட்ட ஆசிட்டை விற்பனை செய்தது யார் என்பதையும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


கோவை: கோவையில் நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது வீசப்பட்ட ஆசிட்டை விற்பனை செய்தது யார் என விசாரிக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் சுகந்தி தெரிவித்துள்ளார்.



கோவை நீதிமன்ற வளாகத்தில் கவிதா என்ற பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவரே இந்த வெறிச் செயலில் ஈடுபட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கவிதாவை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுகந்தி இன்று மாலை சங்க நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் சுகந்தி செய்தியாளர்களிடம் பேசியதாவது,

நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் இதற்கு முன்பு காதலிக்க மறுத்ததால், காதலித்து விட்டு கைவிட்டால் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

இன்று மனைவியின் மீதே கணவர் ஆசிட் வீசிய கொடூரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து பேசினோம். தமிழகத்தில் பெண்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளது.

ஆனால் நீதிமன்றத்திற்கு உள்ளேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை அதிர்ச்சியுடன் பார்க்கிறோம்.

நீதிமன்றத்திற்கு விவாகரத்து, ஜீவனாம்சம் கேட்டு வரும் பெண்கள் அதிகம். பெண்கள் நீதிமன்றம் போகும் போது பாதுகாப்பற்ற நிகழ்வு நடந்தால் பெண்கள் எங்கு சென்று தங்கள் பிரச்சினைகளை வைக்க முடியும்?.

இந்தியாவில் குடும்ப வன்முறை நடப்பதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இது போன்ற வன்முறைகளை குறைக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றங்கள் பாதுகாப்பான வளாகங்களாக இருக்க வேண்டும்.

அமிலங்கள் எங்கு விற்கப்படுகிறது? இவர் யாரிடம் அமிலம் வாங்கினார்கள்? என்பதும் பார்க்கப்பட வேண்டும். அமிலத்தை விநியோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...