உடுமலை அருகே இறந்த சலங்கை மாட்டிற்கு பூஜை செய்து வழிப்பட்ட மக்கள்

உடுமலை அருகே லிங்கம்மாவூரில் சலங்கை மாடு இறந்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சலங்கை மாட்டிற்கு பூஜை செய்து வழிபாடு செய்து, ஊருக்கு பொதுவான கோவில் அருகே அடக்கம் செய்யப்பட்டது.


திருப்பூர்: உடுமலை அருகே இறந்த சலங்கை மாட்டுக்கு பூஜை செய்து பொதுமக்கள் அடக்கம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொங்கல் அன்று பிறந்த கன்றுகளை சோமவாரபட்டியில் உள்ள ஆல்கொண்டமால் கோவிலுக்கு நேர்த்தி கடனாக செலுத்துகின்றனர்.

காளை கன்றுகளை தேர்வு செய்து தெய்வமாக கருதி ஊர் மக்கள் வளர்க்கின்றனர். சலங்கை மாடுகளுக்கு இசைக்கு ஏற்ப ஆடும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் கைகளில் கம்புகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு காலில் சலங்கை கட்டிக்கொண்டு உருமி இசைக்கு ஏற்ப மாடுகளுக்கு முன்னால் சென்று ஆடுகின்றனர். மாடுகளும் இசைக்கேற்ப தலையை ஆட்டி ஆடுகின்றன.

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பாரம்பரிய நடனமாக இது நடைபெற்று வருகிறது. மாட்டுப்பொங்கலன்று சலங்கை மாடுகளுக்கு பூஜை செய்து வழிபாடு செய்வது வழக்கம்.



கொங்கல் நகரம் அருகே உள்ள லிங்கம்மாவூரில் சலங்கை மாடு இறந்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சலங்கை மாட்டிற்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். இளைஞர்கள் உருமி இசைக்கேற்ப தேவர் ஆட்டம் ஆடினர். அதனைத் தொடர்ந்து மாடு ஊருக்கு பொதுவான கோவிலில் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...