பொள்ளாச்சி ஜோதிலிங்கேஸ்வரர் கோயிலுக்கு பரிவார குடைகள் - திருக்கோயில் தீபங்கள் அறக்கட்டளை அன்பளிப்பு

பொள்ளாச்சி திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை சார்பில், 42 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்ட பரிவாரக் குடைகள், விசாலாட்சி- ஜோதிலிங்கேஸ்வரர் சுவாமிகள் திருவீதி உலா வருகையின் போது, ஐதீக முறையில் பயன்படுத்தப்படும் என்று அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.



கோவை: பொள்ளாச்சி ஜோதி நகரில் அமைந்துள்ள விசாலாட்சி சமேதர் ஜோதிலிங்கேஸ்வரர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.



இக்கோவிலுக்கு பொள்ளாச்சி திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை சார்பில், விசாலாட்சி- ஜோதிலிங்கேஸ்வரர் சுவாமிகள் திருவீதி உலா வருகையின் பொழுது பயன்படுத்தப்படும் பரிவாரக் குடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் ஆனைமலை ஆர்ஷ வித்யாபீடம் யூஜ்ய ஸ்ரீ ததேவானந்தா சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் திருக்கோயில் தீபங்கள் அறக்கட்டளை, சுவாமி விவேகாந்தா கலை நற்பணி மன்ற நிர்வாகிகள், மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ரூ 42 ஆயிரம் மதிப்பிலான இரண்டு பரிவார குடைகளை கோயில் அர்ச்சர்கள்களிடம் வழங்கினர்.

பிரதோஷம், மற்றும் திருவிழா காலங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் திருவீதி உலா வரும்போது இந்த பரிவாரக் குடைகள் ஐதீக முறையில் பயன்படுத்தப்படும் என அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...