திருப்பூர் 49வது சர்வதேச நிட்ஃபேர் கண்காட்சி - பேஷன் ஷோவை கண்டுகளித்த ரசிகர்கள்

திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான இந்தியா இன்டர்நேஷனல் நிட் ஃபேர் கண்காட்சியை முன்னிட்டு புதிய ரக ஆடைகளை அறிமுகப்படுத்தும் பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள இந்தியா நிட்பேர் கண்காட்சி வளாகத்தில் 49வது சர்வதேச அளவிலான இந்தியா இன்டர்நேஷனல் நிட் ஃபேர் கண்காட்சி நடைபெற்றுவருகிறது.



மூன்று நாட்கள் நடைபெறும் கோடை, குளிர் கால ஆடைகள் கண்காட்சியில் குளிர்கால ஆடைகள் மற்றும் ஃபேப்ரிக் ரகங்கள், பசுமை தரக்கூடிய மூங்கில் மூலம் தயாரிக்கும் பேபி கேரிங் ரக ஆடைகள், விளையாட்டு ஆடைகள், மறுசுழற்சி முறையில் ஆடை தயாரிக்கும்போது எஞ்சும் கட்டிங் வேஸ்ட், பிளாஸ்டிக் பெட் பாட்டில்ஸ் மூலம் நூல் உற்பத்தி செய்து தொடர்ந்து டி சர்ட், குழந்தைகள் ஆடைகள் தயாரித்து காட்சி படுத்தப்பட்டுள்ளது.



கண்காட்சியின் ஒரு பகுதியாக திருப்பூரில் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்பட்ட புதிய ரக ஆடைகளை விளம்பரப்படுத்தும் வகையிலான பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.



இதை ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...