பல்லடம் அருகே இடி மின்னல் தாக்கி பசுமாடு பரிதாபமாக பலி

பல்லடம் அருகேயுள்ள சின்னூர் கிராமத்தில் அரசன் தோட்டத்தை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவர் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக தோட்டத்தில் கட்டியிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் பரிதாபமாக இறந்தது.


திருப்பூர்: பல்லடம் அருகே இடி மின்னல் தாக்கி மேய்ச்சலுக்குக் கட்டப்பட்டிருந்த பசுமாடு பரிதாபமாக பலியானது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னூர் கிராமத்தில் அரசன் தோட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவர், விவசாயம் மற்றும் மாடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று காலை தனக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்காக தனது தோட்டத்தில் கட்டியுள்ளார்.



மாலை திடீரென இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கிய நிலையில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டிருந்த பசு மாட்டின் மீது இடி மின்னல் தாக்கி பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது.



ஆசையாக வளர்த்த மாடு மின்னல் தாக்கி உயிரிழந்த ஆறுமுகத்தின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உயிரிழந்த பசுமாடு அவரது தோட்டத்திலேயே புதைக்கப்பட்டது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...