கோவையில் கூலிப்படையை ஏவி இளைஞரைக் கொன்ற நண்பன் - அடமானம் வைத்த காரை திருப்பாததால் வெறிச்செயல்

கோவையில் காரை அடமானம் வைத்து பணம் வாங்கி திருப்பி தராத ஆத்திரத்தில், சோமையம்பாளையத்தை சேர்ந்த அஷ்வின், கூவிப்படையை மூலம் நண்பர் சிரஞ்சீவியை தாக்கியுள்ளார். சிகிச்சை பலனின்றி சிரஞ்சீவி, உயிரிழந்த நிலையில், அஷ்வின் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை சோமையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது23).



இவர் தனது நண்பரான அஷ்வின் என்பவரிடம் காரை அடமானம் வைத்து பணம் வாங்கி இருந்தார். ஆனால், சிரஞ்சீவி பணத்தை திருப்பி கொடுத்து காரை திருப்பாமல் இருந்ததாக தெரிகிறது.

இது குறித்து அஷ்வின் பலமுறை கேட்டும் சிரஞ்சீவி பணத்தை திருப்பி செலுத்ததாமல் இருந்த நிலையில், அஷ்வின் நெல்லையில் இருந்து கூலிப்படையை வரவழைத்துள்ளார்.

சஞ்சீவி நேற்றுமுன் மருதமலை சாலையில் சென்றபோது கூலிப்படையினர் சிரஞ்சீவி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், படுகாயமடைந்த சிரஞ்சீவி சுயநினைவில்லாத நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சம்பவம் குறித்து சிரஞ்சீவியின் தந்தை பாலமுருகன் வடவள்ளி காவல் துறையில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் கொலை முயற்சி பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் சிரஞ்சீவியின் நண்பர் அஷ்வின் கூலிபடையை ஏவி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, அஷ்வின் மற்றும் நெல்லையை சேர்ந்த கண்ணன், முத்தையா, ஆனந்த்பாபு ஆகிய 4 பேரை கைது செய்து வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிரஞ்சீவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...