தாராபுரம் நகராட்சி பள்ளியில் அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் கயல்விழி!

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட சித்ராவுத்தன்பாளையம் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இன்று திறந்து வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நகராட்சி பள்ளியில் அங்கன்வாடி கட்டிடத்தை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட சித்தராவுத்தன்பாளையம் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலை பள்ளியில் சுமார் 7 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

இதனிடையே அங்கன்வாடி கட்டிடப் பணியில் முழுவதும் நிறைவடைந்த நிலையில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.



மேலும் இந்நிகழ்ச்சியில் தாராபுரம் நகராட்சி ஆணையாளர் ராமர் மற்றும் திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம் மற்றும் திமுக கவுன்சிலர்கள் கமலக்கண்ணன் மற்றும் சரஸ்வதி ராஜேந்திரன், ஷாலினி பவர் சேகர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறுகையில், தமிழகத்தில் எண்ணற்ற நல்ல திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த அரசு செயல்படுத்தி வருகின்றது. தேர்தல் வாக்குறுதியில் அளிக்காத சில நல்ல திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது, என்றார்.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...