கோவையில் பேசமறுத்த இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய கல்லூரி மாணவர் மீது வழக்குப்பதிவு!

கோவை சுந்தராபுரம் அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளம்பெண் பேச மறுத்ததால், அவருடன் கல்லூரியில் படித்த ஸ்ரீராம் என்ற இளைஞர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை மாவட்ட சுந்தராபுரம் அருகே பேச மறுத்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பிள்ளையார்புரம் கஸ்தூரி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஷானவாஸ். இவரது மகள் ரேஷ்மா (20). தனியார் கல்லூரியில் 2 ஆண்டுகள் படித்துள்ளார், மேலும் படிப்பை நிறுத்தி விட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் கல்லூரியில் படித்த போது, அவரது வகுப்பில் படித்து வந்த குனியமுத்தூர் விநாயகர் வீதியை சேர்ந்த ஸ்ரீராம் (20) என்ற இளைஞரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரேஷ்மா கல்லூரி படிப்பை நிறுத்தியதில் இருந்து சுமார் 10 மாதங்களாக ஸ்ரீராமிடம் பேசாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இன்று வழக்கம்போல் ரேஷ்மா சுந்தராபுரம் டிராவல்ஸ் அலுவலகத்தில் பணியில் இருந்த போது திடீரென அங்கு வந்த ஸ்ரீராம், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது முகத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது அவரது சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வருவதை கண்ட ஸ்ரீராம் அங்கிருந்து தப்பிச் சென்றார். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போத்தனூர் போலீசார் இளம்பெண்ணை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து தப்பிச்சென்ற கல்லூரி மாணவர் ஸ்ரீராமை தேடி வருகின்றனர்.

சம்பவ நடந்த இடத்திற்கு 10 மீட்டர் தொலைவிலேயே போத்தனூர் போலீசாரின் கட்டுப்பாட்டு அறையும், போக்குவரத்தை சீர் செய்ய காவலர்களும் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...